தருமபுரி, பிப்ரவரி 10 –
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாவட்ட பாரதிய ஜனதா மகளிர் அணி ஏற்பாட்டில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் கே. பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் அசோகன், தருமபுரி மாவட்ட அமமுக மாவட்டச் செயலாளர் டி.கே. ராஜேந்திரன், பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம் எல் ஏ ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் பாஐக மாவட்ட மகளிரணி தலைவி கலையரசி, மாநிலச் செயலாளர் ராதிகா, பொதுச்செயலாளர்கள் பிரவீன், சங்கீதா, கணேசன் ,ஓ பி சி மாவட்ட தலைவர் சசிகுமார், தருமபுரி நகரத் தலைவர் சாய் ஆறுமுகம், பொதுச் செயலாளர் பிரபாவதி, புனிதா மற்றும் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



