கிருஷ்ணகிரி, ஜன. 22 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் மிகவும் புகழ்பெற்ற ஜவுளி கடைகள் உள்ளன இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஜவுளி மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். எப்பொழுதுமே பொதுமக்கள் அதிகமாக காணக்கூடிய இடம் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
ச.தினேஷ்குமார் உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருலோகசுந்தர் ஆலோசனையில் உதவிக்கோட்ட பொறியாளர்
அன்பு எழில் முன்னிலையில் பர்கூர் காவல் நிலையம் முதல் சின்ன பர்கூர் வரையும், சிந்தகப்பள்ளி சாலை அரசு மருத்துவமனை வரையும், ஜெகதேவி ரோடு எஸ்.எஸ்.ஜூவல்லரி வரை தனிநபர் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பர்கூர் பேருந்து நிலையம் முதல் திருப்பத்தூர் பிரதான சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பர்கூர் வட்டாட்சியர் சின்னசாமி, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில் மற்றும் உதவி பொறியாளர் அன்பரசன் முன்னிலையில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் காவல்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



