தருமபுரி, ஜனவரி 20 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழுவினர் சார்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட தலைவர் மாது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் சி.பி.எஸ்.திட்டத்தை ரத்து செய், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து,
3.50 லட்சம் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனே நிரப்பிடு,
கருணை அடிப்படிடையில் பணி நியமனத்திற்க்கு விதிக்கப்பட மறைமுக தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 2021 சட்டமன்ற தேர்தல் காலத்தில் திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செபலாளர் ராஜேஸ்வரி, மாநில செயலாளர்கள் பரிதா, ஜெயந்தி, மாநில துணைத் தலைவர்கள் லட்சுமணன், விஜயகுமார், சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க மாநில அசோகர் தமிழ்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



