ராஜாக்கமங்கலம், ஜன. 6 –
ராஜாக்கமங்கலம் அருகே அருணா காலனி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். கொத்தனாரான இவரது மனைவி சிவா ஆனந்தி (28). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவியே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 1ம் தேதி ஐயப்பன் வேலைக்கு செல்லவில்லை. இதை மனைவி சிவா ஆனந்தி தட்டி கேட்டுள்ளார். இதில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவா ஆனந்தி கழிவறைக்கு சென்று சேலையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிவா ஆனந்தி இன்று உயிரிழந்தார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


