குளச்சல், ஜன. 2 –
வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு பகுதி சேர்ந்தவர் அருமை தங்கம் (42). கொத்தனார். இவருக்கு நீண்ட நாட்களாக தீராத நோய் இருந்து வந்தது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.
சம்பவ தினம் மதுபோதையில் வந்த அருமை தங்கம் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலையில் அவரது மனைவி ரோகினி மேலே சென்று பார்த்த போது கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இது கண்ட ரோகினி சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருமை தங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


