குளச்சல், டிச. 27 –
மண்டைக்காடு, கீழ்க்கரை பகுதியை சேர்ந்த தொழிலாளி குமார் மகள் சபிதா (18). இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சபிதா பின்னர் திரும்பவில்லை. கடைக்கும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் தனது மகளை காணவில்லை என குளச்சல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று குளச்சல் போலீஸ் நிலையத்தில் மாயமான இளம்பெண் மற்றும் அவருடன் மண்டைக்காடு புதுதுரை சேர்ந்த நரேஷ் (26) என்பவருடன் தஞ்சம் அடைந்தனர். அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காய்கறி வாங்க கடைக்கு செல்லும் போது சபிதா உடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது தெரிந்தது. இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு ஆலயத்தில் திருமணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு வேண்டி குளச்சல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததும் தெரிந்தது. போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண் காதல் கணவருடன் சொல்வேன் என கூறியதன் பேரில் போலீசார் அறிவுரை கூறி காதல் ஜோடியை சேர்த்து அனுப்பி வைத்தனர்.



