நாகர்கோவில், டிச. 22 –
குலசேகரம் அருகே பொன்மனைப் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷேர்சாட் என்ற செயலி மூலம் அதிக நண்பர்கள் தோழியுடன் பழகி உள்ளார். அந்த வகையில் மதுரை மாவட்டம் அய்யங்கோட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் அஜித்குமார் (23) என்பருடன் ஷேர்சேட் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் இளம் பெண்ணும் அஜித்குமாரும் நெருங்கியவர்களாக பழகினர். இதை பயன்படுத்தி இளம் பெண்ணை, வாலிபர் போட்டோ வீடியோக்கள் எடுத்துள்ளார். பின்னர் அதில் ஆபாச வீடியோ டேட்டாக்களாக மாற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். மேலும் இளம் பெண்ணின் குடும்பத்தையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினிடம் புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ் பி உத்தரவிட்டார். இதை அடுத்து ஏ டி எஸ் பி நாகசங்கர் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் மற்றும் தனிப்படை தனிப்படை போலீசார் இது குறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது இளம்பண்ணுக்கு மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



