நாகர்கோவில், டிச. 8 –
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவன் ராஜன்பார்டி (20). இவரது மனைவி முஸ்கான் (19). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது கோட்டார் சவேரியார் கோவில் திருவிழாவிற்காக குமரி மாவட்டம் வந்திருந்தனர். விழா முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக மாலை 3:30 மணி அளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ராஜன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.
அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த பகுதிக்கு வந்து ராஜனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குழந்தை சாரா (3) திடீரென அழுததால் ஆட்டோ டிரைவர் குழந்தைக்கு உணவு வாங்கி கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு குழந்தை தூக்கி சென்று விட்டார். சுமார் ஒரு மணி நேரமாகியும் குழந்தையை காணாததால் சந்தேகம் அடைந்த ராஜன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
உடனடியாக இந்த தகவல் மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலின் உத்தரவின் பேரில் உடனடியாக 5 தனி படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை தூக்கிக்கொண்டு ரயில் நிலையம் முதல் பிளாட்பாரத்தில் செல்லும் ஆட்டோ டிரைவர் குழந்தையுடன் தனது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து ஆட்டோ நம்பர் அடிப்படையில் அவர் போண் நம்பரை கண்டுபிடித்தனர். மேலும் குழந்தையை தூக்கி சென்றது நாகர்கோவில் கோட்டார் பகுதி சேர்ந்த யோகேஷ் குமார் (32) என்பது தெரிய வந்தது. உடனடியாக சைபர் கிரைம் மூலம் லொகேஷன் தேடினர். அப்போது இரவில் பார்வதிபுரம் பகுதி ஆலம்பாறை என்ற காட்டுப்பகுதியில் இருப்பது தெரிந்தது.
உடனே இரவில் 5 தனி படைகளில் சுமார் 50 போலீசார் காட்டுப்பகுதி முழுவதும் தேடிய போது குழந்தையுடன் புதருக்குள் யோகேஷ் குமார் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்து பிடித்து குழந்தையை மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு சென்று பரிசோதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்தது. குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். யோகேஷ்குமாரை கோட்டாறு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



