நாகர்கோவில், டிசம்பர் 6 –
கிறிஸ்துமஸ் பண்டிகை இந்த மாதம் 25 ஆம் தேதி கொண்டாட கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர். நாகர்கோவிலில் பல்வேறு வண்ணங்களில் கண்ணை கவரும் விதம் விதமான ஸ்டார்கள், வண்ணவிளக்குகள். குடில்கள், அலங்கார பொருள்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் விழா இந்த மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு வண்ணங்களில் கன்னை கவரும் வகையில் விதம் விதமான ஸ்டார்கள், வண்ண விளக்குகள், குடில் ஆகியவை விற்பனைக்கு வந்து உள்ளன.
வேடம் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் ஸ்டார்ஸ் வாங்க வருபவர்களை ஆடிபாடி உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அலங்கார பொருட்களும் ஸ்டார்களையும் வாங்கி செல்கின்றனர். 100 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை விதம் விதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கி உள்ளது.



