களியக்காவிளை, நவ. 20 –
குழித்துறை அருகே திருத்துவபுரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழித்துறை அருகே குறுமத்தூர், திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் மகேஸ்வரி (56). இவருக்கும் அதே பகுதியை சார்ந்த ராஜ்குமார் (52). இருவருக்கும் இடையே கேமரா பொருத்துவதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று மகேஸ்வரி திருத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் மகேஸ்வரியை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மகேஸ்வரி களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


