By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடி–கழிஞ்சூர்–தாராபடவேடு ஏரிகள் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: விரைவில் பல அணைகள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காட்பாடி–கழிஞ்சூர்–தாராபடவேடு ஏரிகள் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: விரைவில் பல அணைகள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
தமிழ்நாடுவேலூர்

காட்பாடி–கழிஞ்சூர்–தாராபடவேடு ஏரிகள் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: விரைவில் பல அணைகள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

Last updated: November 18, 2025 5:30 pm
November 18, 2025
23 Views
Share
SHARE

வேலூர், நவ. 18 –

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஏரிகளை இணைத்து 6.2 கிலோமீட்டர் நடைபாதை, படகு குழாம், செயற்கை மண் தீவுகள் உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் ரூ.36.59 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இதனுடன், ரூ.20.90 கோடி மதிப்பில் காட்பாடி நகரில் மூன்று வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் கழிஞ்சூர் ஏரி உபரி நீர் கால்வாய்த் தரைப்பாலம் பணிக்கான ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

விழாவிற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்க, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதில், காட்பாடி தொகுதிக்காக குறை கூற முடியாத அளவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் இவ்வேரியில் மருத்துவக்கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தபோதும் ஆட்சி மாற்றத்தால் அது மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஏரிகளை மக்கள் பயன்படும் வகையில் மாற்ற வேண்டிய அவசியம் இருந்ததால் தற்போது அவை சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். ஏரிகளை சுத்தமாக பேணுவது மக்களின் பொறுப்பு எனவும், விரைவில் படகு சவாரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மேல் அரசம்பட்டு அணை, பேர்ணாம்பட்டு பத்தல பள்ளி அணை இவ்விரண்டு அணைகளையும் விரைவில் தேர்தலுக்கு முன் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் கூறினார். குடியாத்தம் மேர்தாணா அணையை சுற்றுலா தளமாக மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலூர் ஒருகாலத்தில் பின்தங்கிய மாவட்டமாக இருந்ததை மாற்றியுள்ளோம்; காட்பாடி மற்றும் மகி மண்டலத்தில் சிப்காட் அமைப்பு மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த ஏரிகளைத் திறந்து வைத்தது தனது “பெத்த பொண்ணு கல்யாணம் ஆன மகிழ்ச்சி” அளித்ததாக அமைச்சர் துரைமுருகன் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சிம்ஸ் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் தூக்கவியல் மையத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்தார்
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம்

October 8, 2024
8.2k Views
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
குளச்சல் ஆசாத் நகர் மழைநீர் வடிகால் ஓடை
மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்
அரியலூரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account