மார்த்தாண்டம், நவ. 17 –
அருமனை அருகே கலியல் பகுதியை சேர்ந்தவர் மரிய சோபி மகன் டிப்சியோ (24). மார்த்தாண்டம் அருகே சிராயங்குழியில் பைக் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கடைக்கு சென்றார்.
பின்னர் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு தனது நண்பர் பைக்கில் புறப்பட்டார். பைக்கை நண்பர் ஓட்டினார். அப்போது இரவில் சுமார் 11 மணியளவில் மார்த்தாண்டம் அருகே சாங்கை சந்திப்பில் வந்த போது திடீரென பைக் கட்டுப்பாட்டு இழந்து சாலையோரம் மின்கம்பத்தில் மோதியது.
இதில் பின்னால் இருந்த டிப்சியோ கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். பைக்கை ஓட்டிய நண்பர் சிறிய காயங்களுடன் தப்பினார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் டிப்சியோவை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை டிப்சியோ உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


