புதுக்கடை, நவ. 15 –
புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை (44) மீனவர். இவரது மகள் ஆரோக்கிய பிந்து மோள் (18). இவர் மங்கலகுன்று பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் பெரிய விளை என்ற பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் விசாரித்தபோது மாணவி தாத்தா வீட்டிற்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் மாணவி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை எடுத்து அந்தோணி பிச்சை புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.


