நாகர்கோவில், நவம்பர் 12 –
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து நாகர்கோவிலில் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு உள்ளது. இந்த நிலையில், ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை (எஸ் ஐ ஆர்) எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்து உரையாற்றினார்.
உடன் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



