By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்

Last updated: October 29, 2025 6:21 pm
October 29, 2025
65 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 29 –

நேரடி நெல் விதைப்பு வயல்களில் வால் நெல் கட்டுப்பாடு முறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 11,200 ஹெக்டர் பரப்பில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல் வயல்களை சுத்தமாக பராமரிக்காத சூழலில் பிற வகை செடிகள் மற்றும் களைகள் அதிக அளவில் வளரும். நெல் வயல்களில் குறிப்பாக நேரடியாக விதைக்கப்படும் நெல் வயல்களில் நெற்பயிர் பூக்கும் போது வால்நெல் (ஊரை) எனப்படும் களையும் நெல்லுக்கு முன்னாதாகவே பூத்து கதிராகி வயல்களிலே உதிர்ந்து விடும். மீண்டும் அடுத்த பருவத்திலும் முளைத்து பயிராகி பெரும் மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

நெல் வயல்களில் வால் நெல் பாதிப்பிற்கு நிரந்திர தீர்வு காண 26.09.2025 அன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் வேளாண்மை துறை அதிகாரிகள் சேர்ந்து கள ஆய்வு மேற்கொண்டதில் நிபுணர் குழுவினால் பின்வரும் பரிந்துரைகள் வால் நெல் பாதிப்பினை கட்டுப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சான்று விதைகளை பயன்படுத்த வேண்டும். சேற்றுழவு செய்து மெல்லிய படலமாக தண்ணீர் கட்டுவதால் களை நெல் முளைப்புத்திறன் கட்டுப்படுத்தப்படும். நெல் பூக்கும் பருவத்தில் களை நெல்லின் கதிர்களை களை எடுத்து கட்டுப்படுத்தலாம்.

பயறுவகை பயிர்களை பயிர் சுழற்சி முறையில் பயிரிடும் போது களை நெல் பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்படும். பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டினை விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழும் போது களை நெல் விதைகள் அழிக்கப்படுவதுடன் மண்ணின் வளமும் மேம்படுத்தப்படும். வயலினை மேலோட்டமாக உழுவது மூலம் முளைத்த களைகளை அழிக்கலாம். வயலில் தண்ணீர் கட்டி களை விதைகளை முளைக்க செய்து பின்பு உழுதல். இந்த செயல்முறையை களை நெல் பாதிப்பினை பொறுத்து ஒன்று அல்லது இரண்டு முறை செய்வதன் மூலம் மண்ணில் உள்ள களை நெல் விதைகளை அழிக்கலாம்.

விதைப்பிற்கு 3 நாட்களுக்கு முன் மண் மறையுமாறு சிறிய அளவு நீர் நிறுத்தி ஆக்சிபிளுரோபென் களைகொல்லியினை ஏக்கருக்கு 80 கிராம் அளவில் 20 கிலோ உலர்ந்த மணலுடன் கலந்து தூவ வேண்டும். விதைப்பிற்கு உருளை விதைப்பான் பயன்படுத்தலாம். விதைத்த 25-30 மற்றும் 45-50 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேகம்
கல்விக்கண் திறந்த கர்மவீரர், ஏழை எளிய மாணவர்களுக்கு
திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்
கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஷாரோன் ராஜ் கொலை வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு பெருவிழா

May 14, 2025
90 Views
உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
புதுப்பிக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்
செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.
தஞ்சாவூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account