By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
அரசியல்சிவகங்கைதமிழ்நாடு

திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு

Last updated: October 24, 2025 12:51 pm
October 24, 2025
31 Views
Share
SHARE

சிவகங்கை, அக். 24 –

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 224-வது நினைவு தின விழா அரசு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருது பாண்டியர்களின் நினைவுத்தூணிற்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. ராஜசெல்வன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

விளம்பரம்

You Might Also Like

நீட் தேர்வை அனுமதித்த அதிமுக இப்போது நாடகமாடுகிறது
இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்
விளாத்திகுளத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

April 27, 2025
51 Views
கிறிஸ்தவ வன்னியர் சங்க பொறுப்பாளர்கள்
MULTI TALENT SHOW-2025
நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா
10 நபர்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account