ஈரோடு, அக். 17 –
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஈரோடு, தாளவாடி, சத்தி, கோபி, நம்பியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர் ஆகிய 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய மனோகரன் தலைமை தாங்கினார்.
சரவணன், வீரா கார்த்திக், மதியழகன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பாபு, விக்டர் சாமுவேல், இளங்கோவன், கிருஷ்ணசாமி, இளஞ்செழியன், அருள் அன்பரசு, சந்திர மௌளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



