விழுப்புரம், அக்டோபர் 15 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதல் அமைச்சரின் தொலைநோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாயிலாக மழைநீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் கட்டமைப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு காணொலி குறும்படம் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் மின்னணு திரை வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
மழைநீர் சேகரிப்பு குறும்படத்தில், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது, மழைநீர் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த குறும்படம் இடம்பெற்றுள்ளது.
மழைநீர் சேகரிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும், விவசயாத்திற்கும், கோடை கால தேவைக்கும் மழைநீர் சேகரிப்புத்திட்டம் இன்றியமையாததாக அமையும், எனவே, தூய்மையான குடிநீர் மற்றும் எதிர்கால தேவைக்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானதாகும். எனவே, ஒவ்வொரு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மழைநீர் கட்டமைப்பினை ஏற்படுத்தி, முறையாக பராமரித்து மழைநீரை சேகரித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவா ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பி. மோகன், உதவி செயற்பொறியாளர் த. சிவசங்கரன், மாவட்ட நில நீர் ஆய்வாளர் பிரேமா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



