ஈரோடு, அக். 10 –
சென்னிமலை வடமுகம் வெள்ளோடு ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் கோவில் பகவதி அம்மன் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு தீர்வு காணப்பட்ட மனுக்கள் தொடர்பான பொது மக்களுக்கு வழங்கினார். மேலும் அங்கு இருந்த பொது மக்களிடம் மனுக்களை பெற்றுகுறைகளை கேட்டறிந்தார்.
இதன் பிறகு பொது மக்களுக்காக மதிய உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதை அமைச்சர் முத்துசாமி சாப்பிட்டு ஆய்வு செய்தார். கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் சென்னிமலை செங்கோட்டையன், மொடக்குறிச்சி குணசேகரன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



