கோவை, அக். 06 –
கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக துரை தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டார். அவர் கோவை மாவட்ட பொறுப்பேற்றதையொட்டி கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் புதிய மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், கணபதி ராஜ்குமார் எம் பி மாநகராட்சி மேயர், பொதுசுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், ஆலம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் மீனா ஜெயகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



