ராமநாதபுரம், அக். 1 –
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பட்டணம்காத்தான் ஊராட்சி பூத் கமிட்டி ஆலோசனை, கிளை நிர்வாகிகள் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் ஏற்பட்டில் நடைபெற்ற பூத் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பான பயிற்சி கூட்டம் காலை 10 மணிக்கு மண்டபம் மேற்கு ஒன்றியம் வாலாந்தரவை சமுதாய கூட்டத்திலும் அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு பாரதி நகர் தனியார் மகாலில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் வரவேற்று பூத் கமிட்டியில் உள்ள 9 நபர்கள் மற்றும் ஏஜன்ட் கிளை கழக செயலாளர்கள் தற்போது இருந்தே தேர்தல் பணியில் இறங்க வேண்டும். 2026 ல் எடப்பாடியார் ஆட்சி அமைவது உறுதி ஆகிவிட்டது. அதிமுகவில் தான் உழைக்கும் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இங்கு உள்ள பலர் பல பதவிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது அதற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் யூனுஸ் முஹமது முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல துணைத்தலைவர் வெண்ணிலா சசிகுமார், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் சேது பாலசிங்கம் பேசினர்.
நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன், கலை பிரிவு மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.



