பெருங்களத்தூர், அக். 01 –
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் காமராஜர் சாலை ஸ்ரீராம் பார்க் 63 அப்பார்மெண்ட் எதிரே வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ஒரு தனிநபரின் உடல் வடிவம் மற்றும் தேவைக்கேற்ப துணிகளை சரிசெய்து வசதியான மற்றும் கவர்ச்சிகரமான ஆடைகளை உறுதி செய்வதாக புதிய தையல் பிராண்டான ஸ்டிட்ச்கார்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன பிராண்ட் ஸ்டிட்ச் கார்ட் நிறுவனத்தை நேச்சுரல் சலூன் குழுமத்தின் நிறுவனர் திருமதி வீணா குமரவேல் மற்றும் பிரபல நடிகை ஸ்வேதா சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
2021 இல் நிறுவப்பட்ட ஸ்டிட்ச்கார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர் சேவை திட்டமிட்டப்படி குறிப்பிட்ட தேதி வழங்குதல், இலவச டோர் டெலிவரி போன்றத்தால் முக்கியத்துவம் பெற்றது.
தற்போது பெருங்களத்தூரில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய நிறுவனம் மூலம் பெருங்களத்தூரை சுற்றி உள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு சிறந்த தையல் மற்றும் ஆடை சேவைகளை எளிதாக அணுகக்கூடியதாக வகையில் இந்த கிளை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டிட்ச்கார்ட் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் லாவண்யா சுந்தரராஜன் கூறுகையில்: இந்த மையம் பெருங்களத்தூர், தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிப்பதற்காக திறந்துள்ளோம். மேலும் இதன் கிளை சென்னையில் பல்வேறு கிளைகள் தொடங்க உள்ளோம். மேலும் இளம் பெண் தொழில்முனைவோரை எங்களுடன் பிரான்சைஸ் கூட்டாளர்களாக சேர அழைக்கிறோம். மேலும் தகவலுக்கு, www.stitchcart.co.in ஐப் பார்வையிடவும் அல்லது +91 72001 68295 ஐத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
இந்த நிகழ்வில் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.



