திருப்பூர், செப்டம்பர் 29 –
திருப்பூரில் அமைந்துள்ள கே.எம்.சி சட்டக் கல்லூரியில், முதல் தேசிய மாதிரி நீதி மன்றப் போட்டியை செப்டம்பர் 25 முதல் 27 வரை வெற்றிகரமாக நடந்தேறியது. நாடு முழுவதிலும் உள்ள 52 சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இப்போட்டியில் சட்ட மாணவர்கள் தங்கள் வாதம் மற்றும் ஆராய்ச்சி திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக அமைந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு முன்னாள் நீதியரசர் எஸ். பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றி போட்டியைத் தொடக்கி உரையாற்றினர். இப்போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. 40க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆசிரியர்கள் சிறந்த மாணவ வழக்கறிஞர்களை தேர்வு செய்தனர்.
போட்டியின் இறுதி சுற்றில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மாண்புமிகு. நீதியரசர்
பரத சக்கரவர்த்தி, முன்னாள் நீதியரசர் எம். ஜெய்சந்திரன், நீதியரசர் ஆர். விஜய குமார் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இப்போட்டியில் சென்னையை சேர்ந்த சவிதா சட்ட பள்ளி முதல் இடத்திலும், உத்தர பிரதேசத்தில் உள்ள ஆசிய சட்ட கல்லூரி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சிறந்த பேச்சாளர், சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிறந்த வாதுரைக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய நீதியரசர்கள் கே எம் சி சட்டக் கல்லூரி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் தேசிய அளவிலான தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்தியதை பாராட்டியதுடன் இத்தகைய போட்டியின் மேன்மையையும் சிறப்பையும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைத்தனர். கல்லூரியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இப்போட்டி கே.எம்.சி சட்டக் கல்லூரிக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.



