அஞ்சுகிராமம், செப். 27 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இந்திலையில் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரம் இராமபுரம் ஊராட்சியில் ஆண்டார்குளம் சி.எஸ்.ஐ சமூக நலக்கூடத்தில் நடந்தது. முகாமிற்கு அரசு வழக்கறிஞர் மதியழகன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். வட்டார அலுவலர் நீல பாலகிருஷ்ணன்
அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கந்தசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா குமாரி, ஊராட்சி செயலாளர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் திமுக பொறுப்பாளர்கள் ஆண்டார்குளம் தாஸ், குலசை முருகன், சதீஷ், சுரேஷ் அசோக், பபிஷ், அலெக்ஸாண்டர், கவிதன் மற்றும் அரசு துறைசார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கோரிக்கை மனு கொடுத்தனர். துறைசார்ந்த அதிகாரிகள் பெற்றுக் கொண்டு விரைந்து கோரிக்கைகள் நிறைவேற்றி தருகிறோம் எனக் கூறினர்.



