திருவெண்ணெய்நல்லூர், செப். 25 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.புதுப்பாளையம், ஆண்ராயநல்லூர், டி.பனப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு பி.டி.ஒ., முல்லை தலைமை தாங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கண்காணிப்பாளர் துணை ஆட்சியர் சுந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
மேலும் முகாமில் பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் பக்தவச்சலம், பூக்கடை கணேசன், கிருஷ்ணமூர்த்தி, சுதா சீனுவாசன், ஏழுமலை, விஸ்வநாதன், கிருஷ்ணராஜ், வெங்கடேசன், குமரவேல், சுந்தரமூர்த்தி, ஆராய் வீரக்குட்டி, பாபு, சீத்தாராமன், முருகன், மாயவன், முரளி, சுரேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



