விழுப்புரம், செப்டம்பர் 23 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தினை திறந்து வைத்துள்ளார்கள்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருச்சி தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது. தற்போது இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் புதிய மண்டலம் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டள்ளது. இம்மண்டலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 9 தீயணைப்பு நிலையங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 தீயணைப்பு நிலையங்களும், கடலூர் 16 தீயணைப்பு நிலையங்களும் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களும் என மொத்தம் 5 மாவட்டத்தில் 48 தீயணைப்பு நிலையங்கள் விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் அலுவலக கட்டுபாட்டில் இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், தீயணைப்பு துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் க. தென்னரசு, திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் க. முரளி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் (விழுப்புரம்), திருமதி அனுசியா (கள்ளக்குறிச்சி) உட்பட பலர் உள்ளனர்.



