தஞ்சாவூர், நவம்பர் 26 –
தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 16 மாநில மாநாடு அடுத்த மாதம் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொள்கிறார். மாநாடு குறித்து சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு அடுத்த மாதம் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 7 தேதி வரை நடக்கிறது. முதல் நாளான 4ம் தேதி மாலை தஞ்சாவூர் மேல வீதி மூலை அனுமார் கோயில் அருகே கலை ஊர்வலத்தை சதிராட்டக் கலைஞர் முத்து கண்ணம்மாள் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து திலகர் திடலில் மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன் உள்பட பலர் பேசுகிறார்கள்.
2ம் நாள் 5 ந் தேதியிலிருந்து தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள தமிழரசி மண்டபத்தில் மாநாடு நடக்கிறது. இதில் எம்பிக்கள் முரசொலி, சசிகாந்த் செந்தில், அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத் துணைத் தலைவர் வாசுகி உட்பட பலர் பேசுகிறார்கள். 3 ஆம் நாள் 6ம் தேதி சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதிகள் சந்துரு, அரிபரந்தாமன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்பட பலர் பேசுகிறார்கள்.
நிறைவு நாள் 7 ஆம் தேதி ஒரிசா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முரளிதர் கருத்துரை வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.



