தருமபுரி, செப்டம்பர் 18 –
தருமபுரி நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு நகர தலைவர் ஆறுமுகம் தலைமையில் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி 25 ஆட்டோக்களில் இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு இலவச பயணம் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய 25 ஆட்டோக்களில் பாஜக கொடி கட்டி இலவச பயணத்தை மாவட்ட தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி நான்கு ரோடு முதல் ஒட்டப்பட்டி வரை தருமபுரி நான்கு ரோடு முதல் வென்னாம்பட்டி வரை செல்லும் ஆட்டோவில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கணேசன், நகர பொதுச்செயலாளர் பிரபாகரன், ரவிசங்கர், மாவட்ட செயலாளர் மதியழகன், சசிகுமார், நகர நிர்வாகிகள் சக்திவேல், கவியரசன் பூவரசன், முரளி, சீனிவாசன், அண்ணாதுரை, மாதேஷ், பிரபாகரன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



