திருவெண்ணெய்நல்லூர், செப். 15 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தொட்டிக்குடிசை கிராமத்தில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பி.வி.ஆர். விசுவநாதன் கலந்து கொண்டு “ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” எனும் தலைப்பில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதில் ஓம்சிவசக்திவேல், பக்தவச்சலம், சடகோபன், ஏழுமலை, மோகன்ராஜ், கிருஷ்ணராஜ், வெங்கடேசன், சி.டி. பாலு, மேகலா சதீஷ்குமார், ஏழுமலை, விஜி, பாலாஜி, குமரவேல், பழனி, கோகுல், பிரபு, அங்கமுத்து, சுலைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.



