நாகர்கோவில், செப்டம்பர் 15 –
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜாசிங். இவர் அனைத்து இந்திய காமராஜர் காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவராக உள்ளார். இன்று காலை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். குமரியில் பனைத் தொழிலை நம்பி 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. கல்லுக்கு தடை விதித்ததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார்.
பனையில் இருந்து கள் இறக்கும் தொழிலாளியின் வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ராஜா சிங் வந்திருந்தார். அவரை போலீசார் அலுவலக வாசலிலேயே திருப்பி அனுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் வேடத்தை மாற்றி சட்டை அணிந்து வந்து அதிகாரிகளிடம் மனு அளித்தார்.


