சென்னை, செப். 12 –
கிரிசாலிஸ் ஏஐ மூலம் கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சியை 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் செயல்படுத்த திட்டத்தை வடிவமைத்திருப்பதாக கிரிசாலிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்ராரவி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “திருத்தங்களிலிருந்து இணைப்புகள் வரை” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிகள் பாரம்பரிய செயல்திறன் கண்காணிப்பிலிருந்து ஒவ்வொரு குழந்தையின் திறனையும் உண்மையிலேயே புரிந்துகொள்ளும் முழுமையான, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணங்களுக்கு மாற வேண்டிய அவசரத் தேவை குறித்து இதில் கூறப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு துவக்கப்பட்ட கிரிசாலிஸ் இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 8 நாடுகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளது.
ஒவ்வொரு மாணவனின் மதிப்பீடு என்பது பெரும்பாலும் அறிக்கை அட்டைகளின் வாயிலாக சுருங்கி விடுகின்றன. அவை குழந்தையின் கற்றல் பயணத்தின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகிறது. கிரிசாலிஸ் ஏஐ தவறான கருத்துக்கள், சிந்தனை செயல்முறைகள் மற்றும் உணர்ச்சி பூர்வமான வளர்ச்சியைக் கண்டறிய மதிப்பெண்களுக்கு அப்பால் செல்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒவ்வொரு குழந்தையையும் முழுமையுடன் கற்பவராகவும், அறிவாற்றல், சமூக மற்றும் மெட்டா-அறிவாற்றல் பரிமாணங்களில் வளர்ச்சியடையும் திறன் கொண்டவராகவும் பார்க்க உதவுகிறது. எங்கள் குறிக்கோள் ஆசிரியர்களை மாற்றுவது அல்ல. அவர்களின் கற்பித்தல் திறமை மேம்படுத்துவதாகும். எங்களின் இந்த முயற்சியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதாகும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இதிஹாசா ரசர்ச் இணை நிறுவனருமான கிருஷ்ணன் நாராயணன், ஜிங்கர் லேப்ஸ் பானு பொட்டா, ஸ்ரீ பிரகாஷ் குழுமப் பள்ளிகளின் இயக்குநர் விஜய் பிரகாஷ், ஜோஹோ ஸ்டாட் அப் குளோபல் ஹெட் குப்புலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.



