இராமேஸ்வரம், செப். 06 –
சந்திர கிரஹணத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் இரவு 8 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதாக கோயில் இணை ஆணையர் செல்லத்துரை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: இன்று இரவு 9.57 மணி முதல் அதிகாலை 1.26 வரை சந்திரகிரஹணம் நடைபெறுகிறது. இதனால் இரவு 8 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். திங்கட்கிழமை அதிகாலை 3.30
மணிக்கு நடை திறந்து கிரஹாணாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து அர்த்தஜாம பூஜை திருப்பள்ளியியெழுச்சி ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்று வழக்கம் போல அன்றாட பூஜைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.



