மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சுமார் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய நவீன மயமாக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர். நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அமிர்தவிஜயகுமார்,அன்பழகன், அப்துல்மாலிக், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் வருவாய்த் துறையினர் வேளாண்மை துறையினர் பங்கேற்றனர்.