திருப்பூர் ஜூன்: 23
உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெற திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி.க.காளிமுத்து தலைமையில் சபதம் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி சிக்னல் அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 85 ஆம் ஆண்டு விழா திருப்பூர் புறநகர் மாவட்ட தலைவர் நெல்லை ஜி.தாமோதரன் முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் கேளி.க.காளிமுத்து தலைமை தாங்கி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து , பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் தேளி.க.காளிமுத்து கூறியதாவது தமிழ்நாட்டில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி வார்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகள் வெற்றி பெறுவோம் என்று தொண்டர்கள் முன்னிலையில் சபதம் எடுத்துக் கொண்டுள்ளோம். தொண்டர்கள் அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி பொதுமக்களிடம் அகில இந்திய பார்வர்ட் கட்சி தொடங்கப்பட்ட காரணம், சுதந்திரப் போராட்டத்தில் கட்சியின் பங்கு . தேசிய நலனுக்காக செய்த தியாகங்கள் அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும் .நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு அனைவருக்கும் அறியும்படி எடுத்து செல்ல வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செயல்பாடுகள், பொதுமக்களுக்காக கட்சி செய்த போராட்டங்கள் எடுத்துக் கூறி. தமிழ்நாட்டில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் புறநகர் மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளில் நூற்றுக்கு மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெறும் வகையில் சபதமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் கள்ளக்குறிச்சியில் எரி சாராயம் குடித்து இறந்த 55 பேருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு . தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எரி சாராய மரணத்தை தடுக்கும் வகையில் இரும்பு கரம் கொண்டு தனிப்பட்ட முறையில் நேரடியாக கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் எரி சாராயம் இல்லை என்ற நிலை கொண்டு வரவேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி திருப்பூர் புறநகர் மாவட்ட சார்பாக கோரிக்கையை வைக்கிறது என்று கூறினார்.
விழாவிற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ,நகர நிர்வாகிகள், ஒன்றிய, கிராம நிர்வாகிகள். மாணவரணி ,இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.