சுசீந்திரம், ஆக. 15 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சியில் நேற்று 79-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன் கொடியேற்றினார். அவருடன் செயல் அலுவலர் அழகப்பன், அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுதந்திர தினத்தை கொண்டாடினர். பின்பு பேரூராட்சி தூய்மை பணியாளர் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வருகை புரிந்த பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



