தருமபுரி நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2,500 பேருக்கு அன்னதானமும், 500 பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவையின் மாநில செயலாளர் உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானமும், புடவைகளும் வழங்கினார். இதில் மாவட்ட கழக செயலாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி, அசோகன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



