தியாகி இமானுவேல் சேகரனார் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ,நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



