நிலக்கோட்டை,டிச.22:
சின்னாளபட்டி அரசு மருத்துவமனைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் எம்ஆர் லைப்சேவர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 50-ஆயிரம் மதிப்பிலான பத்து படுக்கைகளுக்கு நவீன கொசு வலைகள் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் மதிப்பில் கட்டப்ட்ட புதிய நவீன ஆய்வகம் மற்றும் அலுவலகத்தை நேற்று ஊரக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்,இதில் சின்னாளபட்டியைச் சேர்த எம்ஆர் லைப்சேவர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 50-ஆயிரம் மதிப்பில் பத்து படுக்கைகளுக்கான நவீன கொசு வலைகளை அதன் இயக்குனர் காமராஜ்,நிர்வாக இயக்குனர் பிரியங்கா ஆகியோர் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் இலவசமாக வழங்கினர்,மேலும் இந்நிகழ்வின்போது ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன்,ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன்,ஒன்றிய செயலாளர்கள் முருகேசன்,இராமன்,மாவட்ட சுகாதார அலுவலர் செல்வகுமார்,பேரூராட்சித் தலைவர் பிரதீபாகனகராஜ்,துணைத்தலைவர் ஆனந்திபாரதிராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன்,நகரச் செயலாளர் மோகன்ராஜ்,எஸ்ஆர்.முருகன்,
வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தீஸ்வரி உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்….



