திருப்பரங்குன்றம் மே 16
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.
இது குறித்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்
ரயில்வே எஸ்ஐ சையது குலாம் தலைமையில் போலீசார் வந்து பார்த்த போது இவர், ரயில் மோதி இறக்கவில்லை என, தெரிவித்தனர் .
அதன் பின்னர் அருகில் உள்ள திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில் எஸ்.ஐ. சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.