தஞ்சாவூர் ஜூலை 15
தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மைய ங்களில் 4075 பேர் குரூப் 1 தேர்வு எழுதினர்.
தமிழக அரசின் பல்வேறு துறை களில் காலியாக உள்ள பணியிடங் களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ் சி சார்பில் போட்டி தேர்வு நடத்தப் பட்டு வருகின்றன. அதன்படி சப் கலெக்டர் ,போலீஸ் துணை சூப்பி ரண்டு, வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை உதவி இயக்குனர் உள்ளிட் ட 90 பணியிடங்களுக்கு குரூப்1 தேர்வு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னர் சரபோஜி கல்லூரி, பாரத் அறிவி யல் கல்லூரி, மேக்ஸ்வெல் மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பிரிஸ்ட் பல்க லைக்கழகம் , சுவாமி விவேகான ந்தர் கல்லூரி, அன்னை வேளாங்க ண்ணி கலை அறிவியல் கல்லூரி, கலைமகள் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி வித்யா மந்திரி பள்ளி, அடைக்கல மாதா கல்லூரி, மருது பாண்டியர் உள்ளிட்ட 21 மையங் களில் இந்த தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் எழுதுவதற்கு 6 ஆயிரத்து 160 பேர் விண்ணப்பித் திருந்தனர் .ஆனால் தேர்வை 4 ஆயிரத்து75 பேர் மட்டுமே எழுதினர் இது 66 சதவீதம் ஆகும்.2 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 34 சதவீதமாகும். தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப் பட்டு இருந்தன .தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனும திக்கப்படவில்லை.
இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது தேர்வர்கள் தண்ணீர் பாட்டில், ஆதார் அட்டை ஆகியவற்றை மட்டு மே தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர் வு மையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட் டு ஆய்வு செய்தார்.