நாகர்கோவில் செப் 29
ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது படகு பழுதடைந்து, வழி தவறி ஓமான் நாட்டு எல்லைக்குள் புகுந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கபட்டு இந்தியாவிற்கு வருகின்றனர் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தின் 4 மீனவர்கள் உட்பட இந்திய மீனவர்கள் 12 பேர் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக அலங்கார மாதா என்ற விசை படகில் சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் விசை படகு பழுதடைந்து, மோசமான காலநிலை காரணம் கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்லைக்குள் அடித்து செல்லப்பட்டது.
இதற்கு முன் வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் தவறுதலாக செல்லும் நமது மீனவர்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். அத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க இம்முறை மீனவர்கள் கடலில் தத்தளிப்பதை அறிந்த உடனே, வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் ஓமான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் நிலைமையை எடுத்து கூறி அவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை வைத்தேன். ஓமான் அரசின் ஒத்துழைப்புடன் நமது மீனவர்கள் மீட்கபட்டு பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன் அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்கள் விசை படகும் கேரளா மாநிலம் கொச்சி துறைமுகம் வந்தடையும் வந்தடையும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து கொள்கிறேன்.
வெளியுறவுத்துறை அமைச்சகம், ஓமன் அரசு, தூதரக அதிகாரிகள், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்