கிருஷ்ணகிரி, ஆக. 30 –
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியொட்டி விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தே. மதியழகன் (பர்கூர்), ஒய். பிரகாஷ் (ஓசூர்), டி. ராமசந்திரன் (தளி), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



