திருப்பூர், மார்ச். 21:
திருப்பூர் கலெக்டா் அலுவலகத்தில் 322 பயனாளிகளுக்கு ரூ.24.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, மாநில சிறுபான்மையினா் ஆணைய தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண் சே.ச வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமை தாங்கி, 322 பயனாளிகளுக்கு ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட கலெக்டா் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சிறுபான்மையின மக்கள் மற்றும் அவர் தம் நிறுவனத்திலிருந்து பெறப்படும் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் விசாரணை செய்கிறோம். இதன் பின்னா் அவர்களால் எழும் பிரச்சினைகள் மீது தொடர்புடைய அரசு துறைகளிடமிருந்து அறிக்கைகளை இந்த ஆணையம் பெறுகிறது. சிறுபான்மையினரின் பிரச்சினைகளை கண்டறியும் பொருட்டு மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளை பார்வையிட்டு நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்த அரசுக்கு தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினரின் ஆணையம் செய்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாநில சிறுபான்மையினர் ஆணையம் திருத்தியமைக்கப்பட்டு 23.07.2024 முதல் தற்போது வரை 14 மாவட்டங்களுக்கு சென்று கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சிகள்(சௌராஷ்டிரர்கள் சமணம்(ஜெயின்) ஆகியோரின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்றடைந்துள்ளதை உறுதி செய்திடும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள அனைத்து மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தி கோரிக்கைகள் பெற்று ஆங்காங்கே தீர்வு கண்டு கொள்கை அடிப்படையில் முடிவு எடுக்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். மேலும், இதுவரை பல்வேறு மாவட்டங்களில் 489 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 302 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மீதமுள்ள கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டா் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் சிறுபான்மையினர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
முதலமைச்சர் மக்களுக்கு நிலம், வழிபாட்டுத்தலங்களுக்கு பட்டா வழங்குதல், சிறுபான்மையினர் நல அலுவலர் நியமனம், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை போல் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் கல்லூரி நடத்துதல் உள்ளிட்ட 3 பரிந்துரைகளை வைத்துள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. இதன் மீது தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் தெரிவித்த கருத்துக்களான கல்லறை தோட்டம், பாதுகாப்பு மற்றும் தடையில்லா சான்று உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் பட்டா நிலத்தில் ஆலயம் கட்டி வழிபாடு நடத்துவதற்கு தடையாக சிலா் இருப்பதாக புகார் கூறியுள்ளனா். இதற்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசின் பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பள்ளி குழந்தைகளுக்கு பி.எம்.கே.வி. திட்டத்தில் நிதி தராத போதும், மாநில அரசு பல கோடி ருபாய் ஒதுக்கீடு செய்து செலவு செய்துள்ளது. பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் சிறுபான்மையினா் என அனைவருக்குமான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச கிறித்துவ தேவாலயம் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் (புனித தோமையார் தேவாலயம்) 1 பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட முஸ்ஸீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 155 பயனாளிக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சங்கம் சார்பில் 146 பயனாளிக்கு ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டிலும், 14 நபர்களுக்கு உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகளையும், 6 நபர்களுக்கு கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டைகள் என 322 பயனாளிகளுக்கு ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனா் ராஜேந்திரன், மாவட்ட எஸ்.பி. யாதவ் கிரிஸ் அசோக், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்கள் ஹேமில்டன் வில்சன், ஸ்வர்ணராஜ், பிரவீன் குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத், ரமீட் கபூர், ஜே.முகமது ரபி, எஸ்.வசந்த், சிறுபான்மையினர் நலத் துணை இயக்குநர் சர்மிளி, வருவாய் கோட்டாட்சியர் (தாராபுரம்) பெலிக்ஸ் ராஜா, (திருப்பூர்) மோகனசுந்தரம், (உடுமலை) குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனா்.