பரமக்குடி, ஏப்.11:
பரமக்குடியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்கள் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் மார்ச் 5 ஆம் தேதி உத்திரகுமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தயா என்ற தீனதயாளன், பேபி என்ற கரன்,, கலாம் என்ற அப்துல் கலாம் ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளிகள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடாத வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் காளோன் குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த மூன்று குற்றவாளிகளும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ள தீன தயாளன், கரன் மற்றும் கலாம்.