கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் மூன்று இளம் வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். கூடலூர் ஆசாரி மார் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் லிங்கேஷ் (24)அதே பகுதியைச் சேர்ந்த விஜய கணேஷ் என்பவரது மகன் சேவாக் (23) மணிகண்டன் என்பவரது மகன் சஞ்சய் (22) அச்சுதன் என்பவரது மகன் மோனிஷ் (22) சுந்தரம் என்பவரது மகன் கேசவன் ( 22) இவர்கள் 5 பேரும் நண்பர்கள் நேற்று மாலை வீட்டிலிருந்து கம்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.இதன்படி மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற இரண்டு பேர் மற்றொரு மோட்டார்.சைக்கிளிலும் சென்றுள்ளனர். தீபாவளி என்பதால் நண்பர்கள் ஐந்து பேரும் மது விருந்து உபசரித்துள்ளனர்.இதன்படி மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் போட்டி போட்டுக் கொண்டு கம்பம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆதி சுஞ்சனகிரி மடம் அருகே வந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன இதில் லிங்கேஷ் சேவாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மற்ற மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மோனிஷ், கேசவன் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கூடலூர் வடக்கு சார்பு ஆய்வாளர் வனிதா மணி வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தீபாவளி நன்னாளில் திருமணமாகாத மூன்று இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3 பேரின் உடல்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்குப் பின் குடும்பத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில் . இது போன்ற நன்னாளில் மதுவை அருந்திவிட்டு தாறுமாறாக இருசக்கர வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச் செல்லும் இளைஞர்களுக்கு தேனி மாவட்ட காவல்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.