தென்தாமரைகுளம், அக். 4 –
இந்து முன்னணி முதல் மாநில தலைவர் ஐயா தாணுலிங்க நாடாரின் 37-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இந்து முன்னணி ஆலோசகர் மிசா சோமன் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் கோபகுமார், தணிகை குமார், தாணுலிங்க நாடார் டிரஸ்ட் பொருளாளர் வக்கீல் எஸ்.பி. அசோகன், மாவட்ட பொது செயலாளர் ஜாண் கென்னடி, முன்னாள் தலைவர் கிருஷ்ண குமார், ராஜா, ராஜேஸ்வரன், ஒன்றிய தலைவர் செல்வன், சுரேஷ் குமார், சுபாஷ், வக்கீல் ராஜேஷ், மார்த்தாண்டன், கண்ணன், ராஜன், அஜய்தேவ் மற்றும் கற்பகம் ராமன் , மனோலயா மணிகண்டன், நெட்டாங்கோடு மணி உள்பட ஏராளமான கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.



