இராமேஸ்வரம் செப்.30 ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 1995 பேஜ் மாணவிகள் ஒன்று கூடல் நிகழ்ச்சி தனியார் திருமண மகாலில் நடைபெற்றது.
அந்த வகையில்
ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1995 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில்
சுமார் 55 மாணவிகள் படித்த நிலையில் சென்னை,கரூர்,தஞ்சை,மதுரை,காரைக்குடி, அருப்புக்கோட்டை,ராமநாதபுரம்,ராமேஸ்வரம் என 48 மாணவிகள் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு அனைவரும் பள்ளியில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது போல் இணைந்து தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடி நிகழ்ச்சியை தொடங்கினர்.
அதன் பின்னர் தனியார் பேருந்து மூலம் தனுஷ்கோடி,கோதண்டராமர் கோயில்,நம்புநாயகி அம்மன் கோயில் என சுற்றி பார்த்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதியம் உணவு முடிந்தவுடன் பள்ளியில் விளையாடியதை நினைவு கூர்ந்து விளையாட்டில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாதாக தம்முடன் படித்து மறைந்த மாணவிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். 29 ஆண்டுகளுக்கு பின் மாணவிகள் ஒன்று கூடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனுசியா,சுபா,ராமேஸ்வரத்தை சேர்ந்த பானுமதி,காயத்திரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி அனைவரும் வாட்சாப் குரூப் உறுவாக்கி கொண்டனர்.
இந்த நிகழ்வானது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.