கன்னியாகுமரி டிச 27
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஆயிரக்கணக்கானோரை காணவில்லை.
தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதில் கிழமணக்குடி பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சி மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர்,மாவட்ட தலைவர் சாலோமன் தீபக், செயலாளர் மைக்கிள் எடில்பெர்ட்,பொருளாளர் வக்கீல் பன்னீர்செல்வம், செய்தி தொடர்பாளர் விஜேஷ், மணக்குடி ஊராட்சி நிர்வாகிகள் அமிர்தராஜ், சுரேஷ், கென்னடி, மயிலாடி பேரூர் நிர்வாகிகள் அருள், மைக்கேல் ராஜ், கலைமணி, சுபின் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.



