மார்த்தாண்டம், ஆக. 25 –
தூத்தூர் பகுதி தோமஸ் நகரை சேர்ந்தவர் சூசை அந்தோணி (49) மகன் ஆன்சன் அந்தோணி (17). இவருக்கு வயது இன்னும் 18 நிரம்பவில்லை. இந்த நிலையில் ஆன்சன் அந்தோணி விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மார்த்தாண்டம் பகுதியில் ஹெல்மெட் அணியாமலும், அஜாக்கிரதையாகவும் நேற்று பைக் ஓட்டி சென்றுள்ளார். இதை அடுத்து மார்த்தாண்டம் போலீசார் அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவரது தந்தை சூசை அந்தோணி மற்றும் மகன் ஆன்சன் அந்தோணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


