நாகர்கோவில், ஜூலை 03 –
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பறிமுதல் செய்ய மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் பெயரில் இன்று காலை மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டாறு மற்றும் பறக்கை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் உணவு பொதியும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் என சுமார் 14 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், ஆய்வாளர் ரேஷ்மா, கண்ணன் மகாராஜா மற்றும் மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட அனிமேட்டர்கள் கலந்து கொண்டனர்.



